Published : 02 Oct 2021 06:41 AM
Last Updated : 02 Oct 2021 06:41 AM

ஊராட்சி தலைவர் வேட்பாளரிடம் செயின் பறிப்பு :

விழுப்புரம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளரிடம் சங்கிலி பறிக்கப்பட்டது.

விழுப்புரம் அருகேயுள்ள மேல்நந்திவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மனைவி முல்லைக்கொடி (30). இவர்,அக்கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகின் றார். நேற்று முன்தினம் பிரசா ரத்தை முடித்துவிட்டு வழக்கம் போல இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்

இந்நிலையில், நேற்று அதி காலை வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர் முல்லைக்கொடியின் 5 பவுன் செயினை பறித்து, தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில், கஞ்சனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x