Published : 02 Oct 2021 06:41 AM
Last Updated : 02 Oct 2021 06:41 AM

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மாநில அரசு அனுமதிக்கவில்லை: பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு :

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மாநில அரசு அனுமதிக்கவில்லை என பாஜக அண்ணாமலை தெரி வித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிடும் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை அன்னியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் கே அண்ணாமலை பேசியது,:

காமராஜருக்கு சுவிட்சர்லாந்தில் பங்களா உள்ளது என்று பொய் சொல்லி அவரை திமுகவினர் தோற்கடித்தார்கள். பொய் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர். பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை . லிட்டருக்கு ரூ 35 குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. நிச்சயம் பாஜக குறைக்க முயற்சிக்கும். மாநில அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறோம். திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

2023 ஜூலை 31-ம் தேதிக்குள் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் உங்கள் வீட்டிற்கு குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கும். இது போல மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்க பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x