காஞ்சி மாவட்டத்தில் : குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது :

காஞ்சி மாவட்டத்தில் : குண்டர் சட்டத்தில்  5 பேர் கைது :
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்திரமேரூர் அருகே உள்ள மதூர் கிராமம், இந்துசேகர்(37), வாலாஜாபாத் வட்டம், வெங்குடியைச் சேர்ந்த அஜீத்(23), சின்னகாஞ்சிபுரம் நசரத்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார்(21), அண்ணாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (எ) அண்ணாத்தூர்மணி(25), மணிமங்கலம், பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ஏகா(எ) ஏகாம்பரம்(40) ஆகிய5 பேரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு வந்தனர்.

வழக்குகளில் அடிப்படையில் இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்டஎஸ்பி எம்.சுதாகர் பரிந்துரைசெய்தார். இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்திஇவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in