Published : 29 Sep 2021 03:21 AM
Last Updated : 29 Sep 2021 03:21 AM

தேவகோட்டை அருகே - கோயிலில் கொள்ளை முயற்சி : ஏற்கெனவே 4 முறை உண்டியலில் ரூ.10 லட்சம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஏற்கெனவே 4 முறை இதே கோயிலில் நடந்த கொள்ளை சம்பவங்களில் உண்டியலை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருடு போனது.

தேவகோட்டை அருகே தாழையூரில் கூத்தாடி முத்துபெரியநாயகி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயி லுக்கு சிவகங்கை, ராமநாதபுரம் புதுக் கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

நேற்று காலை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆறாவயல் போலீஸார், கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மூன்று பேர் கோயில் வெளிப்புற கதவின் பூட்டை கடப்பாரையால் உடைத்துவிட்டு உள்ளே சென்றனர்.

கருவறை கதவை உடைக்க முயன்றும் முடியாமல் அங்கி ருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.

6 மாதங்களுக்கு முன்பு இக்கோயிலில் பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது வரை 4 முறை நடந்த கொள்ளைச் சம்பவங்களில் உண்டியலில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x