நெல்லை டிஎஸ்பிக்கு சிறப்பு நீதிமன்றம் பிடிவாரன்ட் :

நெல்லை டிஎஸ்பிக்கு சிறப்பு நீதிமன்றம் பிடிவாரன்ட் :
Updated on
1 min read

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆஜராகாத டிஎஸ்பிக்கு புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம் நேற்று பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2019-ல் ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு 80 கிலோ போதை பொருள் கடத்த முயன்றதாக 11 பேர் மீது அப்போதைய ராமநாதபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி ரகுபதி வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைபொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கில் ஆஜராகாத டிஎஸ்பி ரகுபதிக்கு (தற்போது நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் பணிபுரிந்து வருகிறார்) பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி குருமூர்த்தி நேற்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in