Published : 28 Sep 2021 03:20 AM
Last Updated : 28 Sep 2021 03:20 AM

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொல்லை வழக்கு - முன்னாள் எஸ்.பி. விழுப்புரம் நடுவர் மன்றத்தில் ஆஜர் :

தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆஜரானார். சிறப்பு டிஜிபிஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். நடுவர் கோபிநாதன் இவ்வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x