Published : 27 Sep 2021 03:20 AM
Last Updated : 27 Sep 2021 03:20 AM

வாக்காளர் மாற்று அடையாள அட்டை பெற மக்களுக்கு அழைப்பு :

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு மாற்று புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள வாக்காளர்களுக்கு மாற்று புகைப்பட அடையாள அட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் அக்டோபர், 1-ம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும்.அனைத்து வாக்காளர்களும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x