Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் - 61 பதவியிடங்கள் போட்டின்றி தேர்வு :

உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களில் 61 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி 19-வது வார்டு உறுப்பினர் பதவி உட்பட 54 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 22-ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்றது. 23-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. நேற்று முன்தினம் (செப்.25) வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதில் 29 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் 7-வது வார்டு, ஆறு ஊராட்சித் தலைவர், 33 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 85 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் கடலாடி ஊராட்சி ஒன்றியம் எம்.கரிசல்குளம் ஊராட்சித் தலைவராக வில்வசாந்தி, திருப்புல்லாணி ஒன்றியம் கொம்பூதி ஊராட்சி மன்றத் தலைவராக ராஜா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மற்ற 4 ஊராட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் 33 ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 30 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதியுள்ள 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x