Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

மதுரையில் வழிப்பறி செய்துவிட்டு பைக்கில் தப்பியபோது - சாலை தடுப்பில் மோதி கொள்ளையர் மரணம் :

மதுரையில் வழிப்பறி செய்துவிட்டு பைக்கில் தப்பியவர் மானாமதுரையில் சாலை தடுப்பு மீது மோதி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே கருமாத்தூர் ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டி மகன் விஷ்ணு (19), கணேசன் மகன் ஹரி (20). இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரை செல்லூர் பகுதியில் வழிப்பறி செய்துள்ளனர். அவர்களை அப்பகுதியினர் விரட்டிச் சென்றுள்ளனர். தப்பிய இருவரும் மோட்டார் சைக்கிளில் மானாமதுரை சென்றனர்.

மதுரை - ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் மானாமதுரை தல்லாகுளம் முனி யாண்டி கோயில் அருகே சென்றபோது சாலையில் இருந்த தடுப்பு மீது மோதினர். இதில்பலத்த காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி விஷ்ணு உயிரிழந்தார். ஹரி சிகிச்சை பெற்று வருகிறார். மானாமதுரை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விஷ்ணு மீது மதுரை மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x