Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

நவராத்திரி விழாவில் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை :

குமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவில் பக்தர் களை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பகவதியம்மன் பக்தர்கள் சங்க செயற்குழு கூட்டம் பகவதியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நடைபெறும் நவராத்திரி திருவிழா மற்றும் பரிவேட்டை நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி களுடன் பக்தர்களையும் அனும தித்து சிறப்பாக நடத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

பகவதியம்மன் கோயில் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரித்து தேவை யான மின்விளக்குகள் அமைக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், சொத்துக்களை முறையாக கணக்கெடுத்து பக்தர்களின் பார்வைக்கு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கன்னியாகுமரி பகவதியம் மன் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x