தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் :

தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை(செப்.27) நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏஐடியுசி மாநில நிர்வாகி புண்ணீஸ்வரன், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவைச் செயலாளர் பாண்டியன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ரகுபதி, ஐஎன்டியுசி மாநில துணைச் செயலாளர் எஸ்.பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டியிலும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in