Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

போதையில் இருந்த பெற்றோரிடமிருந்து : 9 மாத குழந்தை மீட்பு :

தி.மலை மாவட்டம் வந்தவாசி நகரம் ஆரணி சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி அருகே போதையில் இருந்த தாய், தந்தை அருகே 9 மாத ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் பொது சேவைக்குழு நிர்வாகி அசாரூதீன், டாக்டர் கலாம் கனவு அறக்கட்டளை நிர்வாகி கேசவராஜ் உள்ளிட்டோர் தி.மலை குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனர். மேலும், அந்த குழந்தையை மீட்டு வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து பெற்றோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், மகாபலிபுரத்தைச் சேர்ந்த மோகன், அனுஷ்யா என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் காவல் நிலையத்துக்கு வந்த தி.மலை குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்த தினேஷ், புவனேஸ்வரி ஆகியோரிடம் அந்த குழந்தை ஒப்படைக் கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x