Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

விபத்தில் புதுச்சேரி கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு :

திருவண்ணாமலை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரியில் செயல்படும் தனியார் கிரிக்கெட் அகாடமியைச் சேர்ந்த 14 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றதும், அவர்களில் 4 வீரர்கள், புதுச்சேரிக்கு நேற்று முன் தினம் இரவு காரில் புறப்பட்டுள்ளனர். காரை புதுச்சேரி நெல்லித் தோப்பைச் சேர்ந்த ஓட்டுநர் உதயகுமார்(39) ஓட்டினார். தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த அரியப்பாடி என்ற இடத்தில் நேற்று அதிகாலை வந்தபோது, சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது கார் மோதியது. இந்த விபத்தில், சென்னை அம்பத்தூர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் மகன் மனோஜ்குமார்(14) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உதயகுமார் மற்றும் சக வீரர்கள் லத்திகாசரண், யஸ்வந்த், சந்தோஷ் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓட்டுநர் உதயகுமாரும், செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் யஸ்வந்த் உள்ளிட்ட 3 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x