Published : 25 Sep 2021 03:34 AM
Last Updated : 25 Sep 2021 03:34 AM

மத்தூர் அருகே 3 நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் :

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸார் குள்ளம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அதே பகுதியில் வசித்து வரும் கணேசன் (35) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டின் பின்புறம் உரிமம் இல்லாத 3 நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தது தெரிந்தது. 3 நாட்டு துப்பாக்கிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x