Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM

ரூ.11 லட்சத்தில் அங்கன்வாடி கட்டும் பணி தொடக்கம் :

குமரி மாவட்டம் மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட மேல்மிடாலம் அங்கன்வாடி மையத்தின் கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ராஜேஷ்குமார் எம்எல்ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

கிள்ளியூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அவர் ரூ.11.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அங்கன்வாடி கட்டுமானப் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் டென்னிஸ், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் பொறுப்பாளர் ஜெஸ்டின், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜோபி, கிள்ளியூர் ஊராட்சி தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x