Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM
சொந்த வாகனத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதை தடுக்கவேண்டும் என உரிமைக் குரல்ஓட்டுநர் தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இத்தொழிற்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.ரவீந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் கே.சக்திவேல் ஆகியோர் தலைமைவகித்தனர். மாநில பொதுச்செயலாளர் டி.ஏ.ஜாஹீர் ஹுசைன், மாநில பொருளாளர் எஸ்.காளிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வணிக ரீதிக்காக பயன்படுத்துவதை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்துநடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவழி பயன்பாட்டு வாகனங்களால் தூத்துக்குடி மாவட்டத்தில் வாடகை கார் ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளர். எனவே,அதிகாரிகள் அவ்வாகனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்குவழிச்சாலையில் சுங்கச்சாவடி கட்டணம் கடுமையாக உயர்ந்து கொண்டே வருவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஜி.வேல்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.முருகன், செய்தி தொடர்பாளர் ஆர்.ஜெயசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT