Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM

கோவில்பட்டியில் புதிய பாலம் அருகே சாலை சீரமைப்பு :

‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக கோவில்பட்டியில் உள்ள எட்டயபுரம் சாலையில்புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின்இருபுறமும் சாலை அமைக்கப் பட்டது.

பருவக்குடி - கோவில்பட்டி - எட்டயபுரம் வேம்பார் சாலை விரிவாக்கப் பணியையொட்டி, கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் செண்பகவல்லி அம்மன் கோயில் அருகே 6 மீட்டர் அகலம் உள்ள ஓடைப்பாலத்தை 15 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கம் செய்யும் பணி ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியது. இப்பணிகளுடன் சாலையின் கிழக்கு பகுதியில் 100 மீட்டர்,மேற்கு பகுதியில் 80 மீட்டர் நீளத்துக்கு ரூ.32.50 லட்சம் மதிப்பீட்டில் அணுகு சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பாலப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த 10-ம் தேதிமுதல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.

தொடர்ந்து பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைக்க பழைய சாலை பெயர்க்கப்பட்டு, ஜல்லிக் கற்கள் போடப்பட்டன. அதன் பிறகு தார்ச்சாலை அமைக்காமல் விடப்பட்டிருந்தது. இதனால், அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வாகனங்கள் செல்லும் போது, அப்பகுதி முழுவதும் தூசு மண்டலமாக மாறியது. மேலும் ஜல்லிக் கற்களால் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்கும் நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பான செய்தி ‘இந்துதமிழ் திசை’ நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் வெளியானது.இதன் எதிரொலியாக நேற்றிரவுபுதிதாகஅமைக்கப்பட்ட பாலத்தின்இருபுறமும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, அதிகாலையில் முடிக்கப்பட்டது.இதனால்வாகன ஓட்டிகள், பொதுமக்கள்மகிழ்ச்சியடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x