Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM
கயத்தாறு அருகே அகிலாண்டபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் சரவணன் (21). டிப்ளமோ படித்துள்ள இவருக்கு திருமணமாகி 10-நாட்கள் ஆகிறது. சரவணன் நேற்று முன்தினம் கயத்தாறுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு, ஊருக்கு சென்று கொண்டிருந்தார். கடம்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது. சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சரவணன் உடலை மீட்டனர். லாரி ஓட்டுநர் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜசேகர் (49) என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT