Published : 23 Sep 2021 03:13 AM
Last Updated : 23 Sep 2021 03:13 AM
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தஞ்சாவூர் விற்பனை குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது.
இந்த ஏலத்தில் விவசாயிகள் எடுத்து வந்த 580 குவிண்டால் பருத்தியை பல்வேறு ஊர்களிலிருந்து வந்த 6 வியாபாரிகள் ரூ.38 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,777, குறைந்த பட்சமாக ரூ.4,559, சராசரியாக ரூ.6,559 என்ற விலையில் ஏலம் போனது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT