Published : 23 Sep 2021 03:13 AM
Last Updated : 23 Sep 2021 03:13 AM

தி.மலை அண்ணாமலையார் கோயிலின் : ராஜகோபுரத்தின் மீது ஏறி இளைஞர் மிரட்டல் :

திருவண்ணாமலை: தி.மலை அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரத்தில் சுமார் 30 அடி உயர பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று திடீரென ஏறி நின்று கொண்டார். இதைப் பார்த்த பக்தர்களும் ராஜகோபுர பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் அவரை கீழே இறங்கி வரும்படி அழைத்தனர். ஆனால், இறங்கி வர மறுத்த அந்த இளைஞர் தான் வாங்கிய புதிய செல்போனை அருணாச்சலம் என்பவர் எடுத்துச் சென்று விட்டார் என்றும் அதை அவரிடம் இருந்து வாங்கிக் கொடுக்காவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டத் தொடங்கினார். இதுகுறித்த தகவலின்பேரில் தி.மலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். ஏணியை பயன்படுத்தி அவருக்கு அருகில் சென்ற தீயணைப்பு வீரர்கள் இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு அவரை சமாதானம் செய்த தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு நகர காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் புருஷோத்தமன் என்றும் கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளவர் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக தி.மலை நகர காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x