போதையில் தகாத செயல் - தந்தையை கொலை செய்தார் மகள் :

போதையில் தகாத செயல் -  தந்தையை கொலை செய்தார் மகள் :
Updated on
1 min read

மேல்மலையனூர் அருகே கோவில் புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (40). விவசாயியான இவரது மனைவி ரேவதி ஏற்கெனவே இறந்து விட்டார். 17 வயதுடைய மகளுடன் வெங்கடேசன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் வெங்கடேசன் கத்தி யால் குத்தப்பட்டு, கொலை செய் யப்பட்டு கிடந்தார்.

இத்தகவல் அறிந்த அவலூர் பேட்டை போலீஸார் நேரில் விசாரணை மேற்கொண்டு, வெங்க டேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில் வெளியான தக வல் பின்வருமாறு:

முழு போதையில் வந்த வெங்கடேசன் வீட்டில் தனித்து இருந்த17 வயது மகளை பாலியல் வன் கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரிடம் தப்பிய அவர், வீட்டில் இருந்த கத்தியால் வெங்கடேசனை குத்தியுள்ளார். இதில் படுகாய மடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் பயந்து தன் தந்தையை யாரோ கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். முழுமையான விசாரணையில் உண்மை தெரிய வந்துள்ளது. அச்சிறுமி மீது தற்காப்புக்காக நடந்த கொலை என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in