குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து - விருதுநகரில் சாலை மறியல் :

காலிக் குடங்களுடன் விருதுநகர் டிடிகே சாலையில் மறியல் செய்த பொதுமக்கள்.
காலிக் குடங்களுடன் விருதுநகர் டிடிகே சாலையில் மறியல் செய்த பொதுமக்கள்.
Updated on
1 min read

முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து விருதுநகரில் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

விருதுநகர் பெருமாள் கோவில், அன்னை சிவகாமிபுரம், பெரிய பள்ளிவாசல் ஆகிய தெருக்களில் முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் காலிக் குடங் களுடன் டிடிகே சாலையில் நேற்று மறியல் செய்தனர்.

இவர்களுடன் மேற்கு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட் களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப் படுவதாகவும், நேற்று முக்கால் மணி நேரத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், இதனால் போதிய குடிநீர் பிடிக்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கூடுதல் நேரம் குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகத்தில் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகப் போலீஸார் கூறியதைத் தொடர்ந்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in