வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.28.50 லட்சம் நிதி உதவி :

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு காசோலையை வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு காசோலையை வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் இறந்தோர் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தோருக்கு ரூ.28.50 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் தங்கராஜ் பாண்டியன் பயர் ஓர்க்ஸில் பிப்.25-ல் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் இறந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.18 லட்சத்துக்கான காசோலை கள், வெடி விபத்தில் படுகாயமடைந்த 8 பேருக்குதலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.8 லட்சத்துக் கான காசோலைகள், வெடி விபத்தில் சிறு காய மடைந்த 10 பேருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2.50 லட்சத்துக்கான காசோலைகள் என மொத்தம் 24 பேருக்கு முதல்வரின்பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.28.50 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி நேற்று வழங்கினார். முன்னதாக விருதுநகர் தர்க்காஸ் தெருவில் மழை நீர் வடிகால் தூய்மைப் பணியை சீனிவாசன் எம்எல்ஏ முன்னிலையில் ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in