Published : 21 Sep 2021 03:21 AM
Last Updated : 21 Sep 2021 03:21 AM

தூத்துக்குடியில் செப்.23-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செப்டம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் வரும் 23-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்கலாம்.

விவசாயிகள் தங்கள் பகுதி யிலுள்ள வட்டார உதவி இயக்கு நர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம். கோரிக்கை மனுக்களை செப்டம்பர் 23 அல்லது அதற்கு முன்னதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x