பூட்டை உடைத்து 30 பவுன் திருட்டு :

பூட்டை உடைத்து 30 பவுன்  திருட்டு :
Updated on
1 min read

செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் நகைகள் திருடப்பட்டன.

செங்கல்பட்டு, மேலமையூர், மணியம் தெருவைச் சேர்ந்தவர் அழகேசன். இவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனவைரும் நேற்று முன்தினம் இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

புகாரின் அடிப்படையில் வீட்டில் இருந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in