Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

மஞ்சள் கடத்திய 6 பேருக்கு மன்னிப்பு :

மண்டபம் அருகே மரைக்காயர் பட்டினத்தைச்சேர்ந்த நாட்டுப் படகை இலங்கை கடல் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை இலங்கை கடற்படையினர் மடக்கிசோதனை செய்தனர். அதில் 2 டன் சமையல் மஞ்சள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த கடற்படையினர் படகில் இருந்த வேதாளையை சேர்ந்த முத்துக்கனி(32), மன்சூக் (18), அபுகனி(28), மோகன்தாஸ் (36), அகமதுகுட்டி (48), ரகுமான் (40) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இவர் கள் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு மஞ்சளை கடத்திச் சென்றது தெரிய வந்தது. அதனையடுத்து கரோனா காலம் என்பதால் மீனவர்கள் 6 பேரையும் கைது செய்யாமல் மன்னித்து அனுப்பிவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x