Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM
திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டன் (27). இவர், பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா (23). இவர், செய்யாறு தொழிற்பேட்டையில் உள்ள காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 பிள்ளைகள் உள்ளனர்.
தம்பதி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு உள்ளது. இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வனிதா அணிந்திருந்த மாங்கல்யத்தை அறுத்து வீசி தாக்கி உள்ளார். மேலும், காலணி தொழிற்சாலைக்கு பணிக்கு சென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து வனிதா கொடுத்த புகாரின் பேரில் தூசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT