Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

அலைபேசி உதிரி பாகங்கள் திருட்டு :

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பகீம் ரகுமான் என்பவர் அலைபேசி கடை நடத்தி வருகிறார். கடந்த 14-ம் தேதி இரவு விற்பனை முடிந்ததும், கடையை பூட்டிச்சென்றுள்ளார். நள்ளிரவில் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்த இளைஞர்கள், அலைபேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் என ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்றனர். மறுநாள் கடைக்கு வந்த பகீம் ரகுமான், கடை திருந்து கிடப்பதையும், பொருட்கள் திருடு போனதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் அவிநாசிபோலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x