விழுப்புரம் அருகே பூண்டியில் - மின்மாற்றி பழுதால் குடிநீருக்கு தவிக்கும் மக்கள் :

விழுப்புரம் அருகே பூண்டியில் -  மின்மாற்றி பழுதால் குடிநீருக்கு தவிக்கும் மக்கள் :
Updated on
1 min read

விழுப்புரம் அருகே பூண்டி கிராமத்தில் உள்ள மின்மாற்றி கடந்த 15 நாட்களுக்கு முன்பு பழுதானது. இதனால் அப்பகுதி முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான மின் மோட்டார் இயங்காததால் குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து கஞ்சனூர் துணை மின்நிலைய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கஞ்சனூர் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது," தொடர்மழையினால் மின்மாற்றி பழுதானது. இதனைகடைநிலை ஊழியர்கள் கவனிக்க தவறிவிட்டனர். தற்போது மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் மின் விநியோகம் அளிக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in