வடிகால் வசதி அமைத்து தரக் கோரி மறியல் :

வடிகால் வசதி அமைத்து தரக் கோரி மறியல் :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடிகால் வசதி செய்து தரக் கோரி கிராம மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில், திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அகலப் படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் வசதி அமைக்காமல் சாலை அமைத்து வருவதால், மழைக்கா லங்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் கிராமத்தில் சூழ்வதாக கூறப் படுகிறது. எனவே, வடிகால் வசதி செய்து தரவேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த உடையார்பாளையம் போலீஸார், உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in