Published : 19 Sep 2021 03:16 AM
Last Updated : 19 Sep 2021 03:16 AM

சட்டப்பேரவை மனுக்கள் குழு நெல்லையில் அக்.21-ல் கூடுகிறது :

திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2021-2022-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதி கூடுவதென முடிவு செய்துள்ளது. இதனையொட்டி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள் மற்றும் குறைகள் குறித்த மனுக்களை, (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர், தேதியுடன் கையொப்பமிட்டு, `தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை – 600 009’ என்ற முகவரிக்கு வரும் 30-ம் தேதிக் குள் அனுப்பலாம்.

மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவல கங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.

மனுக்கள் ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாக வும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக் கியதாக இருத்தல் வேண்டும்.

தனிநபர் குறை, நீதிமன்றத் தின்முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவை மனுக்களில் இடம்பெற்றிருக்க கூடாது.

சட்டப்பேரவை விதிகளின் வரம்புக்குட்பட்ட மனுக்களை மட்டுமே, மனுக்கள் குழு ஆய்வு க்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக் களை அனுப்பி இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாக குழு கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். மனுதாரர் முன்னிலையில், குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இது குறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தனியாக தகவல் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x