Published : 19 Sep 2021 03:17 AM
Last Updated : 19 Sep 2021 03:17 AM

பர்கூர் அருகே - அனுமதியின்றி எடுத்து சென்ற : கிரானைட் கற்கள் பறிமுதல் :

பர்கூர் அருகே அனுமதியின்றி எடுத்துச் சென்ற கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பர்கூர் வட்டாட்சியர் குருநாதன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் குப்பம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வரட்டனப்பள்ளி-எலத்தகிரி பிரிவுச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் நின்ற லாரியை சோதனை செய்தனர். அதில், 5 கிரானைட் கற்கள் அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிந்தது.

இதுதொடர்பாக வட்டாட்சியர் கொடுத்த புகாரின் பேரில், கந்திகுப்பம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரியுடன் கற்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x