Published : 18 Sep 2021 03:13 AM
Last Updated : 18 Sep 2021 03:13 AM

கீழக்கரை பெட்ரோல் பங்க் கொள்ளையில் 3 பேர் கைது :

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்தவர் ஷேக் உசேன். இவரது பெட்ரோல் பங்க் கீழக்கரை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ளது.

கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் இருவர் வாளால் மேஜையை வெட்டி ரூ.1.70 லட்சம், கையடக்கக் கணினி (டேப்) ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். கீழக்கரை போலீஸார் நடத்திய விசாரணையில், சின்ன மாயாகுளம் ராஜேஷ்(21), கீழக்கரை வடக்குத்தெரு நிர்மல் ராஜ்(20), பாலமுருகன்(22) ஆகியோருக்கு இக்கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரையும் திருப்பூரில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x