இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

பெரியார் பிறந்த நாளையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு, இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கோ.அரவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்டச் செயலாளர்கள் திருச்சி மோகன்குமார், திருவாரூர் ஹரி சுர்ஜித், புதுக்கோட்டை ஜனார்த்தனன், தஞ்சாவூர் பிரபாகரன், மாவட்டத் தலைவர்கள் திருச்சி துளசிதாசன், புதுக்கோட்டை சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, பெரியார் சிலைக்கு அருகே சாலையில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ‘‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு உரிய நீதி வழங்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்’’ ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in