சப் இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து :

சப் இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள அல்லித்துறை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (46). இவர் நேற்றிரவு சுண்ணாம்புக்காரன்பட்டியில் மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்துள்ளார். இருசக்கர வாகனத்தையும் தீவைத்து கொளுத்தியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த சோமரசம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் அங்குசென்று சாந்தகுமாரைக் கண்டித்து, உடனடியாக அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார். அப்போது சாந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக்குடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றார். இதைக்கண்ட பொதுமக்கள் சாந்தகுமாரை விரட்டிப்பிடித்து தாக்கியுள்ளனர். பின்னர் போலீஸார் அங்குசென்று காயத்துடன் இருந்த கார்த்திக், சாந்தகுமார் ஆகியோரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோமரசம்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in