Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM

பெரியார் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு :

தூத்துக்குடி/ திருநெல்வேலி

தூத்துக்குடியில் தந்தை பெரியார்பிறந்தநாளை முன்னிட்டு வடக்குமாவட்ட திமுக சார்பில் பொதுக்குழுஉறுப்பினர் ஜெகன் பெரியசாமிதலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மகளிர்அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதிமுகவினர் அவைத்தலைவர் தர்மம் தலைமையில் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தெற்கு மாவட்டச் செயலாளர் மாரிசெல்வம், ஆதித்தமிழர் கட்சி சார்பில் சுரேஷ்வேலன், திராவிடர் கழகம் சார்பில் பால் ராஜேந்திரன், திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பால்.பிரபாகரன், தமிழ்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தாஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணிசார்பில் காசி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

திருநெல்வேலி

திமுக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், எம்.பி., ஞானதிரவியம், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் கணேசராஜா, காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் நிஜாம், தி.மு.ராஜேந்திரன், தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், திராவிடர் கழகம் மாவட்டத்தலைவர் காசி, மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்பபாண்டியன், திராவிடர் தமிழர்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் கதிரவன் ஆகியோர் தலைமையில்மாலை அணிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x