சங்கராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு :

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிடும் ஆட்சியர் தர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிடும் ஆட்சியர் தர்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊரக உள்ளாட்சித் தேர் தலுக்காக வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பி.என்.தர் ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வின்போது ஆட்சியர் தெரிவித்தாவது:

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட உள்ளாட்சி பதவி யிடங்களுக்கு சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு வாக்கு பெட்டிகள் இருப்பறை, வாக்குச் சீட்டுகள் பிரித்தல் மற்றும் வாக்கு சீட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள அறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும், இம்மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் தொடர்பான அனைத்துபணிகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்திருக் கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் ரா.மணி, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in