Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

ராணுவத்தின் வீரத்தாய் விருதுபெற்ற மூதாட்டியை வாழ்த்திய எம்.எல்.ஏ. :

நாகர்கோவில்

இந்திய ராணுவத்தின் வீரத்தாய் விருதுபெற்ற மூதாட்டியின் வீட்டுக்கு நேரில் சென்றுஎம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மீனச்சலை சேர்ந்த சந்திரிகா தேவி (71) என்பவருக்கு, இந்திய ராணுவம் சார்பில் வீரத்தாய் விருது வழங்கப்பட்டது. மறைந்த அவரது கணவர் தனஜயன் நாயர், மகன்கள் வனஜெயன், தவுகித்திரி ஜெயன் என ஒரே குடும்பத்தில் 3 பேர் ராணுவத்தில் பணியாற்றியதற்காகவும், தேச சேவையில் மகன்களை ஈடுபடுத்தியதற்காகவும் சந்திரிகா தேவிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

வீரத்தாய் விருதுபெற்ற சந்திரிகா தேவிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இதையறிந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சந்திரிகாதேவிக்கு வாழ்த்துக்களை நேரடியாக தெரிவிக்குமாறு நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.விடம் அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, மீனச்சலில் உள்ள சந்திரிகாதேவியின் வீட்டுக்குச் சென்ற எம்.ஆர்.காந்தி, அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x