Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

முட்டத்தில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கடந்தசில நாட்களாக கடத்தல்ரேஷன் அரிசி அதிகளவில் பிடிபடுகிறது. நேற்று முன்தினம் இரவு ரேஷன் கீழமுட்டம் பகுதியில் அரிசிபதுக்கி வைக்கப்பட்டிருப் பதாக கிடைத்த தகவலின் பேரில், வட்டாட்சியர் அப்துல்லா மன்னாதலைமையில் வருவாய்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் சிறிய மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் வைத்திருந்த அவற்றை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது யார்?என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x