Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM
தக்கலை அருகே முளகுமூடு ஆர்.சி.தெருவைச் சேர்ந்தவர் சுஜின்(41). மீன் வியாபாரியான இவர், நேற்று காலை மீன்வியா பாரம் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் களியக்காவிளைக்கு சென்று கொண்டிருந்தார். ஒற்றா மரம் பகுதியில் செங்கல் பாரம் ஏற்றிச்சென்ற லாரி மோதியதில் படுகாயம் அடைந்த சுஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். களியக்காவிளை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT