Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

காரைக்கால் மாவட்டத்தில் - நிமோனியா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் :

காரைக்கால் மாவட்டத்தில் நிமோனியா காய்ச்சலை தடுப்பதற்கான தடுப்பூசி போடும் பணியை, புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நேற்று தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் நிமோனியா காய்ச்சலை தடுக்கும் வகையில் நியூமோ காக்கல் என்ற தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில், இந்த தடுப்பூசி போடும் பணி நேற்று நெடுங்காட்டில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கப்பட்டது. இதில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா பங்கேற்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.

காரைக்கால் நேருநகர், கோயில்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியர் அர்ஜூன்சர்மா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x