Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு - முருகன் வேடம் அணிந்து மனு தாக்கல் :

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இளைஞர் ஒருவர் முருகன் வேடம் அணிந்து வந்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருப்பத்துார் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு என மொத்தம் 34 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, 2-ம் நாள் வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது. இதில், ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மல்லப் பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த மோகன்ராஜ்(22) என்பவர், மல்லப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, தமிழ் கடவுள் முருகப்பெருமான் வேடம் அணிந்து, தனது வேட்பு மனுவை ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜேந்திரனிடம் நேற்று தாக்கல் செய்தனர்.

முன்னதாக முருகன் வேடம் அணிந்து தனது ஆதரவாளர் களுடன் மனு தாக்கல் செய்ய மோகன்ராஜ் ஊர்வலமாக வந்ததை அப்பகுதி மக்கள் வெகுவாக ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x