மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல் :

மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல் :
Updated on
1 min read

திருவாரூரில் மாவட்ட மீன் மற்றும் இதர பொருள் விற்ப னையாளர் சங்கத்தின் ஆண்டுப் பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட தலைவர் எஸ்.அம்ப லவாணன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.அந்தோனி, சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.மாலதி, செயலாளர் டி.முருகையன், சங்க மாவட்டச் செயலாளர் என்.எம்.சம்பந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்டத் தலைவராக சி.செல்லதுரை, செயலாளராக எம்.பி.கே.பாண்டியன், பொருளா ளராக ஜி.தனுஷ்கோடி மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இந்திய கடல்கள் மீன்வள மசோதா 2021-ஐ திரும்பப் பெற வேண்டும். மீனவர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 55 வயது நிரம்பிய ஆண்களுக்கும், 50 வயது நிரம்பிய பெண்களுக்கும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in