Published : 16 Sep 2021 03:13 AM
Last Updated : 16 Sep 2021 03:13 AM

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் கரோனா நிவாரண நிதி :

மயிலாடுதுறை காமராஜர் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், மயிலாடு துறை மாவட்ட தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு நிதி வழங்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில வெளியீட்டு செயலாளர் ஜெக.மணிவாசகம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் மணிமாறன், துணை அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை ஒன்றியச் செயலா ளர் சுரேஷ் வரவேற்றார்.

இதில், முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு மயிலாடுதுறை மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரி யர் மன்றத்தின் சார்பில் முதல் தவணையாக ரூ.4.28 லட்சத்தை பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகனிடம், ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் வழங்கினார்.

மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், திமுக நகரச் செயலாளர் செல்வ ராஜ், ஒன்றியச் செயலாளர்கள் ஞான.இமயநாதன், இளைய பெருமாள், பொது தொழிலாளர்கள் சங்க செயலாளர் அப்பர்சுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மன்றத்தின் மயிலாடுதுறை நகரச் செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x