Published : 16 Sep 2021 03:13 AM
Last Updated : 16 Sep 2021 03:13 AM

அய்யம்பட்டி செல்லாயி அம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு :

திருச்சி

திருச்சி குண்டூர் அய்யம்பட்டி கிராமத்திலுள்ள விநாயகர், செல்லாயி அம்மன், சப்பாணி கருப்பர் கோயில்களில் இன்று (செப்.16) காலை 8.45 மணிக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

குடமுழுக்கு விழாவை யொட்டி பூர்வாங்க பூஜைகள் செப்.13-ம் தேதி தொடங்கின. தொடர்ந்து 3 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இன்று அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாகபூஜையும், 8.30 மணிக்கு கடங்கள் புறப்பட்டு, 8.45 மணிக்கு விமானத்துக்கும், 9 மணிக்கு மூலஸ்தானத்துக்கும் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. பின்னர் அன்னதானம் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x