Published : 16 Sep 2021 03:14 AM
Last Updated : 16 Sep 2021 03:14 AM

மின்சாரம் தாக்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு :

வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் வினோத்குமார்(24).இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லலிதா(20) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், வினோத் குமார் நேற்று தனது வீட்டில் மின்விசிறி போடுவதற்காக சுவிட்சை அழுத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட வினோத்குமார் சுயநினைவை இழந்தார். அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வினோத்குமார் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x