Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

விவசாயியை கடித்து இழுத்துச் சென்ற முதலை :

கடலூர்

சிதம்பரம் அருகே வேலைக்கொடி அருகே உள்ள பழைய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (65). விவசாயியான இவர், அப்பகுதி திமுக கிளைச் செயலாளராகவும் இருந்து வந்தார். நேற்றிரவு அப்பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றிற்கு குளிக்கச் சென்றார். அப்போது அவரை முதலை இழுத்துச் சென்றது. சிதம்பரம் வனசரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர், போலீ ஸார் நேற்றிரவு தேடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x