Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

அனைத்து இயக்கங்கள் சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் :

டெல்லியில் காவல் துறைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அண்மையில் பாலியல் வன் கொடுமை செய்து கொல்லப் பட்டதை கண்டித்து, தஞ்சாவூ ரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

தஞ்சாவூர் ரயிலடியில் அனைத்து இயக்கங்கள், கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மக்கள் அதிகாரத்தின் மாநில பொரு ளாளர் காளியப்பன் தலைமை வகித்தார். இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், மக்கள் கலை இலக்கியக் கழக மாநகரச் செயலாளர் ராவணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

தமிழர் தேசிய முன்னணியின் தேர்தல் பணிக் குழு உறுப்பினர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பெரியாரிய உணர்வா ளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் சு.பழனிராஜன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுல்ஆப்தீன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநகரச் செயலாளர் ஏ.ஜெ.அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி வெற்றிவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மருத்துவக் கல்லூரி கிளை செயலாளர் ராஜா ஜெயபி ரகாஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில குழு உறுப்பினர் என்.சிவகுரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x