Published : 15 Sep 2021 03:12 AM
Last Updated : 15 Sep 2021 03:12 AM

விழுதுப்பட்டு கிராமத்தில் மின்கம்பிகள் திருட்டு : வந்தவாசி அருகே

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த விழுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த 12-ம் தேதி காலை, தங்களது நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றனர். அப்போது, அந்த பகுதியில் இருந்த மின் கம்பங்களில் இருந்து மின்கம்பிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கம்பங்களில் இருந்த மின் கம்பிகள் திருடு போயிருந்தன. இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, “மின்கம்பிகள் திருடப்பட்டதால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டு, கடந்த 3 தினங்களாக கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், மணிலா, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் வாடி வாடுகின்றன. எனவே, புதிய மின்கம்பிகளை உடனடியாக பொருத்தி மின்சாரம் வழங்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x