Published : 14 Sep 2021 03:15 AM
Last Updated : 14 Sep 2021 03:15 AM

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செப்.27-ல் திறனாய்வுச் செம்மல் விருது வழங்கல் :

க.பஞ்சாங்கம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் கோ.பால சுப்பிரமணியன் நேற்று தெரிவித் துள்ளது:

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டுள்ள பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில், ‘திறனாய்வுச் செம்மல்' விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது.

இவ்விருதுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங் கள், பரிந்துரைகள் பெறப்பட்டன. இதில் 2021-ம் ஆண்டுக்கான ‘திறனாய்வுச் செம்மல்’ விருதுக்கு தமிழின் முன்னோடி இலக்கியத் திறனாய்வாளரான பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஒருமனதாகத் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, ‘திறனாய்வுச் செம்மல் விருது' வழங்கும் நிகழ்வு செப்.27-ம் தேதி தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடை பெறும்.

இவ்விருது ரூ.25,000 தொகை யும், சான்றிதழும் அடங்கியது என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x